Site icon Tamil News

இரண்டு இரட்டைக் குழந்தைகள் தேரர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகம்?

இரண்டு ஆண் இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தேரர் ஒருவரை ஹோமாகம தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இன்று (28) ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் தேரர் தலா 05 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

13 வயதுடைய இரண்டு ஆண் இரட்டையர்கள் தேரர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட தேரர் யந்திரம் சூனியம் மூலம் நோய்களைக் குணப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு குழந்தைகளில் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுகவீனமடைந்ததையடுத்து பெற்றோர்கள் குழந்தையை சிகிச்சைக்காக  தேரர் இருக்கும் இடத்திற்கு கொண்டு சென்றனர்.

சந்தேகநபரான  தேரர், குழந்தையை சில நாட்கள் அங்கேயே வைத்து பூஜை நடத்த வேண்டும் என பெற்றோரிடம் கூறியதாகவும், அதன்படி குழந்தையை அங்கேயே தங்க வைத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

பின்னர், இரட்டைக் குழந்தைகளில் மற்றையவர் தனது சகோதரர் இல்லாமலேயே நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், சந்தேக நபர் காரில் வீட்டுக்கு வந்து அந்தக் குழந்தையையும் அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தேரர் பிள்ளைகள் இருவரையும் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு இரட்டைக் குழந்தைகளும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Exit mobile version