Site icon Tamil News

திருகோணமலையில் இரு மாணவிகளை காணவில்லை

திருகோணமலையில் இரண்டு பாடசாலை மாணவிகள் ஐந்து நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே பாடசாலையில் கல்வி கற்கும் 15 மற்றும் 17 வயதுடைய இரு நண்பிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை – அபயபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவர் கடந்த 18ஆம் திகதி காலை வேலைக்குச் செல்வதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

பின்னர் முச்சக்கர வண்டியில் திருகோணமலை – சிங்கபுர பகுதிக்கு வந்து தனது 15 வயது நண்பியை ஏற்றிக்கொண்டு அவரது சகோதரியை முன்பள்ளியில் இறக்கிவிட்டு கந்தளாய் பகுதிக்கு சென்றதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அவர்கள் அங்கிருந்து  பேருந்தில் குருநாகல் வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரின் பெற்றோரும் திருகோணமலை தலைமையகப் பொலிஸாரிலும், உப்புவெளிப் பொலிஸாரிலும் முறைப்பாடு செய்தும் இதுவரை அவர்கள் தொடர்பில் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை.

Exit mobile version