Site icon Tamil News

இரண்டு இலங்கை விமானங்கள் இந்தியாவில் அவசரமாக தரையிறக்கம்

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு நோக்கிச் செல்லவிருந்த இரண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

ஜகார்த்தாவில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தந்த UL 365 விமானமும், மாலைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தந்த UL 116 விமானமும் இந்தியாவில் தரையிறங்கியுள்ளன.

மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்களில் தரையிறங்க முடியாத நிலையில் விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version