Site icon Tamil News

கட்டுநாயக்கவில் டுபாயில் இருந்து வந்த இரு இலங்கையார்கள் கைது!

கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், 1,083 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200 உயர் கொள்ளளவு ​கொண்ட பென்டிரைவ்களை வைத்திருந்த 2 இலங்கைப் பயணிகளை கைது செய்துள்ளனர்.

இன்று (17) காலை டுபாயில் இருந்து குறித்த இரு இலங்கைப் பயணிகளும் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version