Site icon Tamil News

லண்டனில் பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்துகொண்ட மேலும் இரு பெண்கள் கைது

லண்டனில் சனிக்கிழமை நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணியில் ரத்த வெள்ளத்தில் இறந்த குழந்தையின் உருவ பொம்மையை அணிவகுத்து சென்ற இரண்டு பெண்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 மற்றும் 30 வயதிற்குட்பட்ட இந்த பெண்கள், லண்டனின் டிராஃபல்கர் சதுக்கத்தில் நடந்த இன வெறுப்பைத் தூண்டும் செயலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர் .

அவர்கள் ஒரு பாரிய பாலஸ்தீனிய கொடியிலிருந்து இரத்தம் தோய்ந்த குழந்தை போன்ற உருவ பொம்மையை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பேரணியில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து, இந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version