இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் புதிய தலைவராக சாலிய விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனம் இன்று (05.10) வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக கடமையாற்றும் தர்ஷன ரத்நாயக்க, இலங்கை பெற்றோலிய களஞ்சிய நிலைய முனையத்தின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான கடிதங்களை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கையளித்துள்ளார்.