தெற்கு காசாவில் ஹமாஸ் பயன்படுத்திய இரண்டு ஏவுதளங்களை அழித்ததாக இஸ்ரேல் விமானப்படை தெரிவித்துள்ளது.
போர் விமானங்கள் ஒரே இரவில் தாக்குதல் நடத்தியதாக அது கூறியது.
ஏவுதளங்கள் இஸ்ரேலியப் பகுதிகளைத் தாக்கும் முன் அடையாளம் காணப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மத்திய காசாவின் அல் புரேஜ் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்குமிடத்தில் பதுங்கியிருப்பதாகக் கூறும் “பல” ஹமாஸ் போராளிகளையும் குறிவைத்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது.
கடந்த நாளில் சுமார் 25 “பயங்கரவாத இலக்குகள்” அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.