Site icon Tamil News

ஷெங்கன் பிரதேசத்திற்குள் இணைந்தன 2 நாடுகள் – பயண முறை குறித்து வெளியான தகவல்

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இரு நாடுகளின் ஒருங்கிணைப்பில் ஒரு புதிய படியைக் குறிக்கும் வகையில், இரண்டு நாடுகள் ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பாவின் அடையாளச் சரிபார்ப்பு இல்லாத பயண மண்டலத்தில் ஓரளவு இணைந்துள்ளன.

ரூமேனியா மற்றும் பல்கோியா ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து ஒரு தசாபத்திற்கு மேலாகின்றன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ரூமேனியாவும், பல்கோியாவும் விசா இல்லாத ஷெங்கன் பிரதேசத்திற்குள் இணைந்தன.

கடல் அல்லது விமானம் மூலம் பயணிக்கும் போது விசா மற்றும் கடவுச்சீட்டுக் கட்டுப்பாட்டின் மூலம் பயணிக்க வேண்டிய அவசியமின்றி இரண்டு கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையில் பயணிக்க முடியும்.

இருப்பினும், ஒஸ்ரியாவின் வீட்டோ காரணமாக, ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத புலம்பெயர்ந்தோர், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் எளிதாக நுழைய முடியும் என்ற அச்சத்தின் காரணமாக தரைவழிகளால் ஷெங்கன் பிரதேச நாடுகளுக்குள் வருவதற்கு ஷெங்கன் விசா சேர்க்கப்படவில்லை.

ஷெங்கன் பகுதியானது, 25 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளையும், ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளான சுவிட்சர்லாந்து, நோர்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version