Site icon Tamil News

இலங்கையில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து: பயணிகளுக்கு நேர்ந்த கதி

வெலிமடை – அம்பகஸ்தோவ பகுதியில் இன்று பிற்பகல் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

மெதவெலயிலிருந்து – வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றும் ஓல்டிமாரிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றும் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் 7 பெண்களும் 4 ஆண்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வெலிமடை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version