Site icon Tamil News

மடிக்கணினி வெடித்து விபத்துக்குள்ளானதில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு

வீட்டிற்குள் இருந்த மடிக்கணினி வெடித்து விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாக பாகிஸ்தானில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

03 வயதுக்கும் 09 வயதுக்கும் இடைப்பட்ட இரண்டு பெண்கள் மற்றும் 05 சிறுவர்கள் உட்பட 09 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 6 வயது சிறுமியும் 9 வயது சிறுவனும் உயிரிழந்ததாக மருத்துவமனை உறுதி செய்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்களில் உள்ள பழுதடைந்த பேட்டரிகள் அதிக வெப்பமடைந்து தீப்பிடித்து, சில சமயங்களில் அவை வெடித்துச் சிதறக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version