Site icon Tamil News

யாழில் கேரள கஞ்சாவுடன், இருவர் கைது!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டனர்.

கடற்படையினரின் தகவலுக்கமைய சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சா பொதிகளை கொண்டு சென்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  3.5 கிலோகிராம் வரையான கேரள கஞ்சா இதன்போது கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்களையும் கைப்பற்ற கேரள கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version