மீகொடையில் உள்ள தளபாடங்கள் மொத்த விற்பனை நிலையமொன்றில் இருந்து 08 மில்லியன் ரூபா பணத்தை இரண்டு சந்தேகநபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இன்று (25) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று மாலை மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் ஆயுதங்களுடன் விற்பனை நிலையத்திறுகுள் நுழைந்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.