Site icon Tamil News

ரஷ்யாவில் இரண்டு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன

ரஷ்யாவில் இரண்டு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்கள் சாத்தியம் என சந்தேகிக்கப்படும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விமான நிலையங்களில் அனைத்து புறப்பாடுகளும் வருகைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், இரண்டு விமான நிலையங்களுக்கு வரும் சில விமானங்கள் மாஸ்கோ விமான மண்டலத்தில் உள்ள மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், கடந்த காலங்களில் ரஷ்யாவை இலக்கு வைத்து உக்ரேனிய ஆளில்லா விமான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Exit mobile version