Site icon Tamil News

கோப்பாய் சிறுமியின் மரணத்தில் திருப்பம் : அறையில் கண்டெடுக்கப்பட்ட கடிதம்!

கோப்பாய் திராணவெளி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற சிறுமியின் மரண விசாரணைகளில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சிறுமி அவரது பாட்டியால் கொலை செய்யப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.  சிறுமி உயிரிழந்த அறையில் இருந்து பாட்டி தமிழில் எழுதிய கடிதம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

குறித்த கடிதத்தில், “எனக்கு சாக வேண்டும் போலிருக்கிறது. நான் இறந்தால் என் பேத்தி தனியாக இருப்பாள். அதனால்தான் நாங்கள் இருவரும் இறக்க முடிவு செய்தோம். எங்கள் இறப்புக்கு வேறு யாரும் காரணமில்லை…” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கோப்பாய் திராணவெளி பகுதியில் உள்ள விடுதி அறையொன்றில் இருந்து 12 வயது சிறுமியின் சடலம் ஒன்று அண்மையில் கண்டெடுக்கப்பட்டது.

அங்கு அவரது பாட்டி அருகில் உள்ள மற்ற படுக்கையில் சுயநினைவின்றி இருந்த நிலையில், சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இருவரும் கடந்த 9ஆம் திகதி திராணவெளி பகுதியிலுள்ள விடுதிக்கு வந்திருந்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக விடுதி ஊழியர்கள் பொலிஸாருக்கு அறிவித்த போது, ​​அறையில் கட்டிலில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிசார் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு தூக்க மாத்திரை போட்டு இன்சுலின் ஊசி போட்டு மூதாட்டி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 63 வயது மூதாட்டி யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதுடன் அறையில் இருந்து கிடைத்த கடிதம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version