Site icon Tamil News

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொசுஷிமா துறைமுகத்தில் 20 செ.மீ உயரம் கொண்ட சுனாமி அலை அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

டோக்கியோவின் ஹச்சிஜோ டவுன், ஹச்சிஜோ-ஜிமாவில் 50 செமீ சுனாமி காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து டோக்கியோவின் தெற்கே உள்ள தொலைதூர தீவுகளில் எரிமலை செயல்பாட்டினால் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் இன்று காலை சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது

Exit mobile version