Site icon Tamil News

திருகோணமலை- டொக்யாட் கடற்கரையில் கரையொதுங்கிய ஆணொருவரின் சடலம்!

திருகோணமலை- டொக்யாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலமொன்று இன்று (01) மாலை கரையொதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை கடலில் மிதந்துகொண்டிருந்த நிலையில் குறித்த சடலத்தினை அவதானித்த காவல்துறையின் உயிர் காக்கும் படையினர் கடலுக்குச் சென்று குறித்த சடலத்தினை கரைக்கு எடுத்து வந்துள்ளனர்.

இதுவரை இனங்காணப்படாத நிலையில் இடது கால் இழக்கப்பட்ட அங்கவீனமான ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் இதுவரை மரணத்திற்கான காரணம் தெரியவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

சுடலத்தை இனம் காண்பதறகான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version