Site icon Tamil News

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் சாந்தனுக்கு அஞ்சலி

சாந்தனுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

உடல் நலக்குறைவு காரணமாக சாந்தன் நேற்று தமிழகத்தில் உயிரிழந்துள்ளார்.

இதன்படி சாந்தன் எனப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராஜாவிற்கு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

இளைஞர்களின் ஏற்பாட்டில் அவருக்கு கண்ணீர் அஞ்சலி பதாதைகளுடன் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாந்தனின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version