Tamil News

மணிப்பூரில் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட பழங்குடி பெண்கள் ;நெஞ்சை பதறவைக்கும் செய்தி

மணிப்பூரில் குகி பழங்குடி இன பெண்ணை நிர்வாணமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை பெற்றுத் தரப்படும் என அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் கூறியுள்ளார்.

மணிப்பூரில் தங்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டுமென மெய்தி இனத்தவர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், குகி இனத்தவர் இதை எதிர்க்கின்றனர்.இரு தரப்புக்கும் இடையே கடந்த மே மாதம் தொடங்கிய கலவரம் இன்று வரை நீடிக்கிறது, இதில் பல கொடுமையான சம்பவங்களை நடக்கிறது.

இதுவரை 135 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Manipur Horror: May 4 Video Of Two Kuki Women Being Molested, Paraded Naked  Sparks Massive Outrage

மே மாதமே, குகி இனத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தின் வீடியோ காட்சிகள் நேற்று வெளியானது.

ஒட்டுமொத்த இந்தியாவே வெட்கிதலைகுனியச் செய்யும் இச்சம்பவத்தின் வீடியோ காட்சிகள் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

குற்றவாளிகள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிசார் அறிவித்துள்ள நிலையில், மரண தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Exit mobile version