Site icon Tamil News

செக்கு குடியரசில் டிரக்குடன் மோதி விபத்திற்குள்ளான ரயில் : ஒருவர் பலி, பலர் காயம்!

கிழக்கு செக் குடியரசில் ரயில் ஒன்று டிரக் ஒன்றுடன் இன்று (24.01) மோதி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலின் ஓட்டுநர் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏதுமின்றி அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் செக் ரயில்வே தெரிவித்துள்ளது.

விபத்தின் போது ரயிலில் 60 பேர் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். நாட்டின் தலைநகரான ப்ராக் நோக்கிச் சென்ற வேகமான ரயில், போஹுமின் நகருக்கு அருகில் உள்ள கடவையில் டிரக் மீது மோதியதில், விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version