Site icon Tamil News

ரயில் விபத்து : குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என மோடி அறிவிப்பு!

ஒடிசா ரயில் விபத்துக் குறித்து விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைப் பெற்றுவந்த மருத்துவமனைக்கு சென்று அவர்களை பார்வையிட்ட பிரதமர் மோடி பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்படி கூறினார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,  குற்றவாளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள். இது ஒரு வலியை ஏற்படுத்தக் கூடிய சம்பவம். உயிரிழந்தவர்களை அரசு மீண்டும் கொண்டு வர முடியாது. ஆனால் அவர்கள் குடும்பத்தினரின் துக்கத்துடன் இருக்கும்.

இந்த விபத்து அரசுக்கு மிகவும் சீரியஸ் ஆனது. காயம் அடைந்து சிகிச்சை மேற்கொண்டு வரும் நபர்களை அரசு கை விட்டுவிடாது. ஒவ்வொரு வகையிலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்டால் யாராக இருந்தாலும் தப்பிக்க  முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version