Site icon Tamil News

ரயில் விபத்து – பாகிஸ்தான் ரயில்வேயின் அதிரடி நடவடிக்கை

பாகிஸ்தானில் கடந்த 6ம் திகதி கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்ற ஹசரா ரயில் விபத்துக்குள்ளானது. இதில் 10 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் 34 பேர் பலியானார்கள். மேலும் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த ஹசரா ரயில், பாகிஸ்தானின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் கராச்சியிலிருந்து 275 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் விபத்தில் சிக்கியது.

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 15 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் ரயில்வே, அதிகாரிகளின் அலட்சியத்தால் ரயில் விபத்து நிகழ்ந்ததாக பொறியாளர் மற்றும் மேலாளர் உட்பட 6 பேரை சஸ்பெண்டு செய்துள்ளது.

Exit mobile version