Site icon Tamil News

பிரான்ஸில் தனிமையில் இருந்த முதியவருக்கு நேர்ந்த துயரம்

பிரான்ஸில் இடம்பெற்ற தீ விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை Boutigny (Seine-et-Marne) நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இங்குள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக மாலை 7.30 மணிக்கு தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முற்பட்டனர்.

ஆனால் கட்டுப்பாட்டை மீறி தீ வேகமாக பரவியதால், தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இரவு 10.30 மணி அளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இச்சம்பவத்தில் 80 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலத்தை மீட்ட தீயணைப்புபடையினர், மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்த நபர் குறித்த வீட்டில் தனியே வசித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version