Tamil News

நடிகர் பாலாவுக்கு நேர்ந்த சோகம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் பாலாவுக்கு நேர்ந்துள்ள சோகம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனக்கு நேர்ந்த சோகத்தை அவர் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

’கலக்கப் போவது யாரு?’, ‘குக் வித் கோமாளி’ போன்ற நிகழ்ச்சிகளில் பிரபலமானவர் நடிகர் பாலா. பெரிய திரையிலும் ஒரு சில படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். பெரிய திரையில் நகைச்சுவை நடிகராக இருந்தாலும் நிஜத்தில் ஹீரோவாக பல நல்ல காரியங்களைச் செய்து வருகிறார் பாலா. அந்த வகையில், சமீபத்தில் பல மலைகிராம மக்களுக்கு சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். இவரின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

மேலும் சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை 3 லட்சத்திற்கும் மேல் பணம் உதவி செய்துள்ளது மட்டும் இன்றி, மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில் தான், பாலா தன்னுடைய கைவிரல்கள் உடைந்து விட்டதாக போட்டுள்ள பதிவு, இவருடைய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பலர் என்ன ஆச்சு என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். பாலா விரலில் கட்டுடன் போட்டுள்ள பதிவில் ‘மனம் நிறைந்தது… விரல் உடைந்தது… நன்றி!’ எனக் கூறியுள்ளார். மக்களுக்கு உதவி செய்யும் போது எதிர்பாராத விதமாக இவருடைய விரல் உடைந்திருக்கலாம் எனப் பலரும் கமெண்டில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

 

Exit mobile version