Site icon Tamil News

வெளிநாடொன்றில் செல்பி எடுக்கும்போது ரஷ்ய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

வெளிநாடொன்றிற்கு சுற்றுலா சென்றிருந்த ரஷ்ய இளம்பெண்ணொருவர், செல்பி எடுக்கும்போது 170 அடி உயரமுள்ள மலையுச்சியிலிருந்து கீழே விழுந்தார்.

ரஷ்யாவிலுள்ள Sochi என்னும் நகரில் அழகுக்கலை நிபுணராக பணியாற்றிவந்தவர், Inessa Polenko (39). சமீபத்தில் ஜார்ஜியா நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தார் Inessa.

கருங்கடலுக்கு அருகே அமைந்துள்ள மலை ஒன்றில் ஏறிய Inessa, மலையுச்சியில் நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது கால் தடுக்கி, 170 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற, பிரபல சுற்றுலாத்தலமான Sochi நகரிலேயே, இன்று அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு, உலகம் முழுவதும் இதுவரை சுமார் 400 பேர் இதுபோல செல்பி எடுக்க முயலும்போது விபத்துக்குள்ளாகியுள்ளார்கள் அல்லது உயிரிழந்துள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் 20 வயதுகளிலிருக்கும் இளம்பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version