Site icon Tamil News

சிகாகோ சர்வதேச விமான நிலையத்தில் பெண் ஒருவருக்கு நேர்ந்த துயரம்!

சிகாகோ ஓஹேர் சர்வதேச விமான நிலையத்தில் கன்வேயர் பெல்ட் அமைப்பில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டெர்மினல் 5 இன் பேக்கேஜ் பகுதியில் இயந்திரங்களில் ஒரு பெண் சிக்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் சாமான்களை நகர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் கன்வேயர் பெல்ட் அமைப்பில் சிக்கி, சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதிகாலையில் ஆளில்லாத ஒரு தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் அவர் செல்வது வீடியோவில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version