Site icon Tamil News

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கு நேர்ந்த துயரம்!

சிங்கப்பூரில் கட்டுமானத் தளத்தில் வேலை செய்துகொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் 7.5 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

Jurong Region Line எனும் ஜூரோங் வட்டார ரயில் பாதைக்கான கட்டுமானத் தளத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மியன்மாரைச் சேர்ந்த 27 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். ஊழியர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் காலமானார்.

சம்பவம் நடந்த இடத்தில் அனைத்துக் கட்டுமானப் பணிகளும் உடனடியாய் நிறுத்தப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று தெரிவித்தது. அத்துடன் மனிதவள அமைச்சு நடத்தும் விசாரணையில் உதவி வருவதாகவும் அது கூறியது.

“உயிரிழந்த ஊழியரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். குத்தகையாளர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு ஆதரவும் உதவியும் வழங்குவோம்” என்று ஆணையம் கூறியது.

Exit mobile version