Site icon Tamil News

பிரான்ஸிற்கு சுற்றுலா சென்ற 2 பெண்களுக்கு நேர்ந்த துயரம்!

பிரான்ஸில் சுற்றுலா சென்ற 2 பெண்கள் வீதி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸின் தென்மேற்கு நகரமான Sainte-Hélène (Gironde) இல் இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பிரான்ஸிற்கு சென்ற 21 வயதுடைய இரு இளம் பெண்கள், ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்துள்ளார்.

இந்த நிலையில், வீதியில் பயணித்த மற்றொரு ஸ்கூட்டருடன் மோதியுள்ளது.

D6 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற இவ்விபத்தில், குறித்த இரு பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய ஸ்கூட்டரில் பயணித்த நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த நிலையில், பொலிஸாரால் சாரதி கைது செய்யப்பட்டார். அவர் மது போதையில் ஸ்கூட்டரைச் செலுத்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

Exit mobile version