Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட விபரீதம் – 8 பேர் கவலைக்கிடம்

மெல்போர்ன் இசை நிகழ்ச்சி ஒன்றில் போதைப்பொருள் உட்கொண்ட 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

7 பேர் சுயநினைவின்றி சுவாச ஆதரவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் அளவுக்கதிகமாக அல்லது விஷம் கலந்ததே விபத்துக்குக் காரணம் என நம்பப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விக்டோரியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version