Site icon Tamil News

சமஷ்டித் தீர்வைக் கோரும் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வைக் கோருவதுடன், நீண்டகாலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், 1956ஆம் ஆண்டு முதல் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை நோக்கிச் செயற்படுவதற்கு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

“தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இணங்க, அதிகாரப் பகிர்வு ஒரு கூட்டாட்சி கட்டமைப்பில் இருக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடாகும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தவும், இலங்கையின் தமிழ் சமூகத்திற்கு மரியாதை மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதிப்படுத்தவும் இந்தியா அழைப்பு விடுத்ததையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நினைவு கூர்ந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கூற்றுப்படி மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் அதே வேளையில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உறுதி செய்யப்பட வேண்டும் அல்லது ஒன்று இல்லாமல் மற்றொன்று அர்த்தமற்றதாகிவிடும்.” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version