Site icon Tamil News

இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் : மின்னல் தாக்கம் குறித்தும் எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மின்னல் மற்றும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, மாலை மற்றும் இரவு வேளைகளில் இலங்கையை சுற்றிலும் இடியுடன் கூடிய மழை ஏற்படுவதற்கு சாதகமான வளிமண்டல நிலை உள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேபோல் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு இன்று (18.11) பிற்பகல் 1.00 மணி முதல் நாளை (19.11) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், கிழக்கு, மத்திய, வடமத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version