Site icon Tamil News

இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்!

இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

தென் மாகாணம் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனவும் முன்னிறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சபரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு துறை கூறுகிறது.

இதற்கிடையில், இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக ஏற்படக்கூடிய  ஆபத்துக்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கபபட்டுள்ளது.

Exit mobile version