உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் யுத்தம் காரணமாக உக்ரைன் இராணுவத்தில் கடமையாற்றிய மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம் பாக்முத் என்ற இடத்தில் மூன்று இலங்கை அதிகாரிகள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது.
செவ்வாய்கிழமை (டிசம்பர் 05) உக்ரைன் போர்முனையில் ரஷ்யப் படைகளுக்கு எதிராக போரிட்ட போது அவர்கள் கொல்லப்பட்டதாக தூதரகம் மேலும் கூறியது.
உயிரிழந்த மூன்று அதிகாரிகளில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் கப்டன் ரனிஷ் ஹெவகேயும் அடங்குவார். இவர் பல் மருத்துவர் என அழைக்கப்படுகிறார்.
உயிரிழந்த மற்றும் காயமடைந்த உக்ரேனிய இராணுவத்தினரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த மூன்று இலங்கை அதிகாரிகள் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.