Site icon Tamil News

நாரம்மல கிரியுல்ல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி

நாரம்மல கிரியுல்ல பிரதான வீதியின் கிவுல்கல்ல கோவில் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மேலும் ஒருவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version