Site icon Tamil News

ஒரே குடும்பத்தில் மூன்று பேர் அடுத்தடுத்து பரிதாபமாக மரணம்! பொலிஸார் விசாரணை

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஸ்வரம் வெட்டர்காடு கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் கடந்த 6ம் திகதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

பன்னீர்செல்வம் இறந்து சில நாட்களுக்குப் பிறகு, கோகுல் நேற்றிரவு புதிதாகக் கட்டப்பட்ட வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

கோகுல் இறந்த தகவல் அறிந்த கோகுலின் தாத்தா இளங்கோ வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும்

பன்னீர்செல்வம்-தேன்மொழி தம்பதியின் மகன் கோகுல் (வயது 14). இவர் அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். உடல் நலிவுற்ற நிலையில் இருந்த கோகுலின் தந்தை பன்னீர்செல்வம் கடந்த 6ம் திகதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

பன்னீர்செல்வம் உயிரிழந்து சில நாட்கள் ஆன நிலையில் நேற்று இரவு புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் கோகுல் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவருடைய தாத்தா இளங்கோ (75) மின்சாரம் இல்லாத நேரத்தில் பழுதான மின்விளக்கு ஒன்றை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் வந்ததை அடுத்து இளங்கோவின் கைகளில் மின்சாரம் தாக்கவே அச்சத்தில் மின்கம்பியை தூக்கி வீசியதாகவும், மின்வயர் கோகுல் மீது விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் கோகுல் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோகுல் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோகுலின் தாத்தா இளங்கோ வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஜீயூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை இறந்து இரண்டு நாட்களில், அவரது 14 வயது மகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தமை , தாத்தா தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தமை , காமேஸ்வரம் சுற்றுவட்டார கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version