Site icon Tamil News

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து – மூவர் பலி

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்தினால் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பேருந்து முல்லைதீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றுடன் பார ஊர்தி மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த அதி சொகுசு பேருந்து திருத்த வேலை காரணமாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் திருத்த பணியில் மூவர் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது பேருந்து மீது பார ஊர்தி மோதியதில் மூவர் உயிரிழந்துடன் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மூவரின் சடலங்களும் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் உள்ளன சம்பவம் தொடர்பில் மாங்குளம் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Exit mobile version