Site icon Tamil News

இது கடுமையான முடிவு :கொத்துக் குண்டுகளை வழங்குவது குறித்து பைடன் கருத்து!

கொத்துக் குண்டுகளை உக்ரைனிடம் ஒப்படைப்பது “கடினமான முடிவு” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கொத்துக்குண்டுகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் இந்த முடிவை சர்வதேச நாடுகள் எதிர்திருந்தன. இருப்பினும் உக்ரைன் ரஷ்யாவில் குறித்த குண்டுகளை பயன்படுத்தாது என அமெரிக்கா கூறியது.

இந்த நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பைடன்,  இது எனது பங்கில் மிகவும் கடினமான முடிவு. மேலும், இதைப் பற்றி நான் எங்கள் கூட்டாளிகளுடன் விவாதித்தேன்”எனத் தெரிவித்துள்ளார்.

“உக்ரேனியர்களின் வெடிமருந்துகள் தீர்ந்துபோயுள்ளன என்றும், அதக பீரங்கிகளை வழங்கும் வரை ஒரு மாற்றாக இந்த குண்டுகளை வழங்க தீர்மானித்ததாகவும் கூறியுள்ளார்.

Exit mobile version