Site icon Tamil News

ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த தேரர்

ஹப்புத்தளை வெலிமடை வீதியில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் வெளிநாட்டு பெண் ஒருவரை தவறாக நடந்துக் கொண்ட செய்த குற்றச்சாட்டின் பேரில் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை ஹப்புத்தளை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி உறுதிப்படுத்தியுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தேரர் வெலிமடை வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டு தம்பதியரை கோயிலை காட்டுவதாக கூறி கோயிலுக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.

குறித்த தேரர் வெளிநாட்டு பெண்ணுடன் வந்த தனது துணையை வெளியில் இருக்குமாறு கூறிவிட்டு விகாரையுடன் கூடிய இருட்டு அறையில் வைத்து வெளிநாட்டு பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டதாக ஹப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வெளிநாட்டு பெண் ஹப்புத்தளை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், இந்த தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 வயதான போலந்து பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டவர் 18 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version