Site icon Tamil News

இலங்கையில் ஆன்லைன் மூலம் பெரும்தொகை பணத்தை கொள்ளையடித்த பெண் கைது!

ஆன்லைனில் பெரும் தொகையை ஏமாற்றிய வெளிநாட்டு பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண் உக்ரைன் நாட்டு பிரஜை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த  2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையின் முன்னணி வங்கியொன்றின் கணக்கு சட்டவிரோதமான முறையில் இணையத்தில் அணுகப்பட்டதாகவும்,  குறித்த பெண்ணின் கணக்கில் ஒரு கோடியே முப்பத்தேழு இலட்சம் ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பெண் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு  அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

எவ்வாறாயினும் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version