தமது அரசாங்கத்தின் கீழ் பாதாள உலகக் குழுக்கள் முற்றாக ஒழிக்கப்படும் என தேசிய மக்கள் படையின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
காலி கொஸ்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போதைப்பொருளின் கோரப்பிடியில் இருந்து தாய்நாட்டைக் காப்பாற்ற கட்டுப்பாட்டுடன் செயல்படுவேன் என்றும் அவர் கூறினார்.
பாதாள உலக போதைப்பொருள் வியாபாரிகளுடன் மோதுவதற்கு தமது நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டம் அனைவருக்கும் நியாயமாக அமுல்படுத்தப்படும் நாடுதான் இன்றைய தேவை எனவும், தேசிய மக்கள் சக்தியின் கீழ் மட்டுமே ஆட்சியை உருவாக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.