Site icon Tamil News

அரசியல் கைதிகளின் மரணம் தொடர்பில் பெலாரஷ்ய அதிகாரிகளுக்கு ஐ.நா விடுத்துள்ள உத்தரவு!

அரசியல் கைதிகளின் சித்திரவதை மற்றும் மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு பெலாரஷ்ய அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

பெலாரஸிற்கான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, பெலாரஸில் காவலில் இறந்த ஐந்து பேர் அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டில் தண்டனை பெற்றதாகக் கூறுகிறது.

இறந்தவர்களில் எவரும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும், சிறையில் இருந்த கைதிகள் இறந்தது “அரசு அதிகாரிகளால் தன்னிச்சையாக உயிரைப் பறிக்கும் அனுமானத்தை உருவாக்குகிறது” என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை வழக்கறிஞர்கள், தற்போது சிறையில் உள்ள பல பெலாரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தொடர்பில் கவலைப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

வியாஸ்னா மனித உரிமைகள் மையத்தின் கூற்றுப்படி, நாட்டில் தற்போது 1,401 அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர், அவர்களில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அலெஸ் பியாலியாட்ஸ்கியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version