காங்கோவின் தலைநகரில் நேற்று (27.07) இடம்பெற்ற இசைநிகழ்வொன்றில், கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கின்ஷாசாவின் மையப்பகுதியில் உள்ள 80,000 பேர் கொள்ளளவு கொண்ட ஸ்டேட் டெஸ் தியாகிகள் மைதானத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்தவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தொலைக்காட்சி RTNC தெரிவித்துள்ளது.
நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காத அதிகாரிகள், சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்