Site icon Tamil News

இலங்கையில் தேங்காய் திருடிய நபருக்கு நேர்ந்த சோகம்!

மினுவாங்கொடை, கட்டுவெல்லேகம பிரதேசத்தில் தேங்காய் திருடிய நபர் ஒருவரை காவலாளி ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளதாக கட்டான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கட்டானைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version