Site icon Tamil News

ஸ்பெயினில் உயிரிழந்த சுற்றுலா பயணி : உயிர் காப்பாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் ஸ்பெயின் கடற்கரையில் “சிவப்புக் கொடியை உயர்த்தியபோது  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஸ்பெயினின் வலென்சியாவில் உள்ள குல்லேராவில் உள்ள ரேகோ கடற்கரைக்கு அப்பால் உள்ள கடலில் 77 வயதான பிரித்தானிய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அறிந்த மீட்பு குழுவினர் உடனடியாக விரைந்து செயற்பட்டுள்ளனர். அவருக்கு உடனடியாக சிபிஆர் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறாக நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், விடுமுறைக்கு வருபவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று உயிர்காப்பாளர்கள் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

Exit mobile version