Site icon Tamil News

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது – மகிந்த!

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு தாம் உட்பட 7 பேர் பொறுப்பேற்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் பொறுப்புக்கூறும் சந்தர்ப்பம் கிடைத்தால் அதனைச் செய்யத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் பிரார்த்தனை செய்ய வந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், இந்த நாட்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டை உயர்மட்டத்தில் நடாத்துவதற்கு தாம் தயாராகவுள்ளதாகத் தெரிவித்த அவர், அது தொடர்பான நிறுவனப் பணிகளை திரு பசில் ராஜபக்ஷ மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

Exit mobile version