Site icon Tamil News

வடக்கு, கிழக்கு மக்களின் ஆதரவு ரணிலுக்கு – கருணா அம்மான்

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமது வாக்குகளை இம்முறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே பயன்படுத்துவார்கள் என கருணா அம்மான்  தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாணந்துறை அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த  அவர்,

“அடுத்த முறையும் ஆட்சிசெய்யும் வாய்ப்பை அவருக்குக் கொடுக்க வேண்டும். அதனால்தான் நானும் அவரை ஆதரிக்கிறேன். குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நிச்சயமாக அவருக்கு வாக்களிக்கப் போகிறார்கள்.

அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க அனைவரும் தயாராக உள்ளனர். அதனால்தான் நானும் எனது கட்சியும் அவருக்கு ஆதரவு அளிக்கிறோம்’’ என்றார்.

 

 

Exit mobile version