Site icon Tamil News

போராட்டத்தில் இறங்கும் இலங்கை தாதியர் சங்கம்!

தாதியர் அரசியலமைப்பை இரகசியமாக திருத்தும் நடவடிக்கைக்கு எதிராக நாளைய  (26.09) தினம் சுகாதார அமைச்சுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர்  மதிவத்த கூறியுள்ளார்.

தாதியர் பற்றாக்குறையினால் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க வேண்டிய  அதிகாரிகள் தாதியர் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான வரைவை இரகசியமாக தயாரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு நாட்டின் சுகாதார அமைப்பில் காணப்படும் குறைபாடுகளை சரி செய்வதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்

Exit mobile version