Site icon Tamil News

சோமாலிய கடற்கொள்ளையர்கள் வசம் உள்ள கப்பலை மீட்க பஹ்ரைனிடம் உதவி கோரும் இலங்கை அரசு!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை இழுவை படகு லோரென்சோ சோன் 4 ஐ விடுவிக்க பஹ்ரைனில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கூட்டு கடற்படையின் ஆதரவை இலங்கை கடற்படை கோரியுள்ளது.

06 பணியாளர்களுடன், அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கப்பல் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குறித்த கப்பலில் இருந்து 06 பணியாளர்களையும் பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்பதில் இலங்கை அரசு கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version