Site icon Tamil News

மது அருந்துவதை தடுத்த தந்தையை கொலை செய்த மகன்

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இளைஞர் ஒருவர் குடிப்பதை தடுக்க முயன்ற தந்தையை கொலை செய்துள்ளார்.

அவர் தனது தந்தையின் தலையில் செங்கலால் தாக்கியதாகவும், அவர் இறந்துவிட்டதைக் கண்டு, தற்கொலை போல மாறுவேடமிட முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

“ஒரு வாக்குவாதத்திற்கு பிறகு, கோரக்பூரைச் சேர்ந்த கன்ஹையா திவாரி தனது தந்தையின் தலையில் தாக்கினார் பின்னர் அவர் தற்கொலை செய்து கொள்வது போல் மின்விசிறியில் தூக்குபோட முயன்றார்.பின்னர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்” என உத்தரபிரதேச காவல்துறையின் மூத்த அதிகாரி ஜிதேந்திர ஸ்ரீவஸ்தவா.

சத்ய பிரகாஷ் திவாரியின் மனைவி முன்னதாக இறந்துவிட்டார். அவர் தனது ஒரே மகனுடன் கிராமத்தில் வசித்து வந்தார். இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.

கன்ஹையா திவாரி தினமும் மது அருந்துவது வழக்கம், இதனால் வீட்டில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Exit mobile version