அசாமில் தனது 20 மாதக் குழந்தையை சிகரெட் புகைக்கவும், மது குடிக்கவும் தாயே வற்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படங்கள் வைரலானதைக் கண்ட சைல்டு லைன் அதிகாரிகள், பொலிஸில் புகார் அளித்தனர். இதன் பேரில் அந்த குடியிருப்பை பொலிஸார் சோதனை செய்து குழந்தையை மீட்டனர். அத்துடன் அக்குழந்தையின் தாயை விசாரணைக்காக காவலில் எடுத்தனர்.
தாயும், குழந்தையும் தற்போது குழந்தைகள் நலக் குழுவின் பாதுகாப்பில் இருப்பதாகவும், விரிவான விசாரணைக்காக ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அதற்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
அந்த பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். சிலர் அந்தக் குழந்தையை தத்தெடுக்க விரும்பியுள்ளனர்.