Site icon Tamil News

பிரான்ஸில் சைக்கிளில் சென்ற குழந்தைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பிரான்சில் உள்ள பிரபலமான விடுமுறை இடத்துக்கு அருகே சைக்கிளில் சென்ற 10 குழந்தைகள் மீது கார் மோதியதில் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

மேற்கு பிரான்ஸில் உள்ள லா ரோசெல்லில் உள்ள அவென்யூ டி கொலிக்னியில் இந்த விபத்த இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் 07 குழந்தைகள் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று குழந்தைகள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

 

Exit mobile version